Saturday 4th of May 2024 07:19:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
எஸ்பி.பி.யின் உடல் நிலை அச்சப்படும் அளவிற்கு இல்லை: மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம்!

எஸ்பி.பி.யின் உடல் நிலை அச்சப்படும் அளவிற்கு இல்லை: மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம்!


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை அச்சப்படும் அளவிற்கு இல்லை என அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதையொட்டி வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம்பெற பிரார்திக்குமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு இல்லை என அவரது மகன் சரண் விளக்கமளித்துள்ளார். அது குறித்து அவர் தெரிவிக்கையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பி மகன் சரண் கூறியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE